search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி பறிமுதல்"

    • பறக்கும் படை அதிகாரி தலைமையில், குழுவினர் பாகலூரில் சர்ஜாபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • லாரியை சோதனை செய்த போது 6 யூனிட் கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது

    ஓசூர்,

    விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி பொறியாளரும், மண்டல பறக்கும் படை அதிகாரியுமான விஜயலட்சுமி தலைமையில், குழுவினர் நேற்று முனதினம் பாகலூரில் சர்ஜாபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில் 6 யூனிட் கற்கள் அனுமதியின்றி கடத்தி வந்தது தெரிய வந்தது-. இது குறித்து அதிகாரி விஜயலட்சுமி, பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் கனிமொழி வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • டிப்பர் லாரியில் அனுமதியின்றி செம்மண் பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
    • போலீசார் டிரைவர் முனுசாமியை கைது செய்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே லாரிகளில் கனிமவளம் கடத்தப்படுவதாக பவானி தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பொன்னு சாமி, உதவியாளர் ரவிக்குமார், அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பவானி - மேட்டூர் ரோட்டில் மாணிக்கம்பாளையம் பிரிவு அருகே வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது அனுமதியின்றி செம்மண் பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    விசாரணையில் லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த பல்லக்கா பாளையத்தை சேர்ந்த ஒசுவங்காட்டை சேர்ந்த முனுசாமி என்பதும், லாரி யின் உரிமையாளர் சங்க கிரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த சிவசங்கர் மற்றும் ஜெகன் ஆகியோர் லாரியை வாடகைக்கு எடுத்து செம்மண்ணை கடத்தி சேலம், நாமக்கல் மாவட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் முனுசாமியை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிவசங்கர் மற்றும் ஜெகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓடை பகுதியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள லாரியை பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள காவேரியப்பன் கொட்டாய் கிராமத்தில் ஓடை பகுதியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில், பாலக்கோடு வருவாய் வட்டாட்சியர் ராஜா சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் பொப்பிடி பகுதியை சேர்ந்த சிவக்குமார் அரசு அனுமதி இன்றி செம்மண் அள்ளுவது தெரிய வந்தது. இதில் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள லாரியை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கணியாமூரில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2.5 டன் யூனிட் கருங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் உதவி புவியிலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தனி துணை வட்டாட்சியர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் (கணிமம்) ஆகியோருடன் கணியாமூரில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 4 முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதியின்றி 2.5 டன் யூனிட் கருங்கல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு உதவி புவியிலாளர் பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புவியியல் மற்றும் சுரங்க துறை தனி வருவாய் ஆய்வாளர் கவுதமன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தினர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள ஆரூர்பட்டி கிரா மத்தில் சேலம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை தனி வருவாய் ஆய்வாளர் கவுதமன் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தினர். அப்போது அதன் டிரைவர் கீழே இறங்கி ஓடினார். லாரியை சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து

    தாரமங்கலம் காவல்

    நிலையத்தில் ஒப்படைத்த னர். மேலும் இது தொடர்பாக தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்க விரைந்து சென்றனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து லாரியை டிரைவர் பாண்டிதுறையை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை தாலுகா மட்டிகை கிராமத்தில் அனுமதி பெறாமல் ஜல்லி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வருவதாக திருநாவலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்க விரைந்து சென்றனர். அப்போது லாரி ஒன்று அதிவேகமா வந்தது. போலீசார் உடனடியாக அந்த லாரியை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மன்னார்குடியைச் சேர்ந்த பாண்டித்துரை அனுமதி இன்றி லாரியில் ஜல்லி கடத்தியது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து லாரியை டிரைவர் பாண்டிதுறையை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்தனர். 

    • உரிய ஆவணங்கள் இன்றி கிரானைட் கற்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.
    • அந்த லாரியை மத்தூர் போலீசாரிடம் கனிம வள அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லம்பள்ளி பிரிவு சாலையில் கனிம வள அலுவலர் பொன்னுமணி தலைமையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக ஒரு லாரி வந்தது.

    அதிகாரிகளை பார்த்ததும் லாரியை நிறுத்திவிட்டு அதை ஒட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதையடுத்து அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி கிரானைட் கற்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.

    அந்த கற்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது. கிரானைட் கற்களுடன் நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரியை மத்தூர் போலீசாரிடம் கனிம வள அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த லாரி யாருடையது? தப்பி ஓடிய டிரைவர் யார்?என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • சுரங்கத் துறை தனி வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், தலைமையில் உதவி புவியியலாளர் தேன்மொழி உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்
    • அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்றினை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் பிரிவு சாலையில் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், தலைமையில் உதவி புவியியலாளர் தேன்மொழி உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.

    அப்பொழுது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி ஒன்றினை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் (37) என்பதும், அதே கிராமத்தை சேர்ந்த வளர்மதி (36) என்பவருக்கு சொந்தமான டாரஸ் லாரியில் மூன்று லோடு அளவுள்ள கிராவல் மண்ணை உரிய அனுமதியின்றி கொண்டு செல்வது தெரிய வந்தது. இந்நிலையில் செந்தில்குமார் லாரியில் இருந்து குதித்து தப்பியோடி விட்டார்.

    இச்சம்பவம் தொடர்பாக உதவி புவியியலாளர் தேன்மொழி துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார் டிரைவர் செந்தில்குமார், டாரஸ் லாரி உரிமையாளர் வளர்மதி ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • விருத்தாசலம் அருகே கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    • தப்பியோடிய புலியூர் டிரைவர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் கோ.பூவனுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், கிராவல் மண் கடத்தி வந்தது தெரிந்தது. டிரைவர் தப்பியோடினார். மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, லாரியை, பறிமுதல் செய்தனர். தப்பியோடிய புலியூர் டிரைவர் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

    • 5 பேர் மீது வழக்கு பதிவு
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த கீழ்ப்பாக்கம் ராசாபாளையம் பகுதியில் இருந்து 30 பனை மரங்களை வெட்டி லாரியில் கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் மனோன்மணி அரக்கோணம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வெட்டிய 30 பனைமரத்துடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் பனை மரங்களை வெட்டிய 3 பேர் மற்றும் லாரி டிரைவர், உரிமையாளர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×